பதவியேற்பதற்கு முன்பாகவே பணியை தொடங்கிய அதிமுக பெண் கவுன்சிலர்..!

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:59 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் பதவியேற்கும் முன்பே தனது பணியை தொடங்கி விட்டார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 9வது வார்டில் அதிமுக சார்பில் தேவசேனா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
இவர் அந்த பகுதியில் வாக்கு கேட்க செல்லும் போது சாக்கடைகளை முதலில் சுத்தம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்
 
 இந்த நிலையில் அவர் இன்னும் பதவி ஏற்காத நிலையில் இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து சாக்கடையை சுத்தம் செய்தார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்