ஒத்துவராத அதிமுக - தேமுதிக டீலிங்... அடுத்து என்ன??

திங்கள், 8 மார்ச் 2021 (09:23 IST)
நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. 

 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ள சூழ்நிலையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
ஆனால் தற்போது நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 09) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்