அம்மாவை பார்க்க விடவில்லை என்று யார் சொன்னது? : பரபரப்பை கிளப்பும் பவர் ஸ்டார்

புதன், 12 அக்டோபர் 2016 (16:25 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி தெரிந்து கொள்ள, சென்னை அப்பல்லோவிற்கு சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


 

 
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் சீனிவாசன் கடந்த 10ம் தேதி, அப்பல்லோவிற்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே விடவில்லை என்று கூறப்பட்டது.
 
இதுபற்றி ஒரு வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த சீனிவாசன் ‘ என்னை உள்ளே விட வில்லை என்று யார் சொன்னது?.. நான் சென்ற போது ஆளுநர் வந்திருந்தார். அதனால், அவர் செல்லும் வரை என்னை காக்க வைத்தார்கள். அதன்பின் என்னை அழைத்தார்கள். 
 
அதன்பின் நேராக இரண்டாவது மாடிக்குப் போனேன். அங்கு இருந்தவர்களிடம் அம்மாவின் உடல் நிலை குறித்து விசாரித்தேன். அவர் நலமாக இருப்பதாக கூறினார்கள். அதுவே போதும் என்று அங்கிருந்து கிளம்பி விட்டேன். முதல்வர் குணமாகி திரும்பியதும், அதிமுகவில் இணைவேன் ” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்