தமிழ்த் தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார்

வியாழன், 27 ஜனவரி 2022 (08:23 IST)
தமிழ்த் தாய் வாழ்த்து: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீஸில் புகார்
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில் நேற்று நடந்த அரசு விழாவில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கும்போது எழுந்து நிற்காமல் இருந்ததாக தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்திருக்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்