நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்த தம்பதியர்!

திங்கள், 14 நவம்பர் 2022 (15:04 IST)
அரியானா மாநிலத்தில், ஒரு தம்பதியர் தங்களின்   நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் நடத்தி உள்ளனர்.

அரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் இல்லாத தம்பதியர், கோவில்களுக்குச் சென்று அங்குள்ள கால் நடைகளுக்கு உணவிட்டு வந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாய் இந்த நபரைப் பின் தொடர்ந்து வந்துள்ளது. இந்த நாயை வளர்க்க முடிவு செய்த அவர்கள், இதற்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டனர்.

இந்த நாய்க்கு தற்போது, இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து,  ஆண் நாயான ஷேருவை தேர்ந்தெடுத்து, தன் உறவினர்கள் சுமார் 100 பேருக்கு அழைப்பிதல் கொடுத்து, ஸ்வீட்டி- ஷேருவின் திருமணத்தை பிள்ளைகள் திருமணம் போல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்