8 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (11:05 IST)
இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர் 
 
மேலும் படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விசைப்படகையும் மீன்பிடிக்கும் வலையையும் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகிய 
 
8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் மீனவர்களை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்