உள்ளாட்சித் தேர்தல் - ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்

வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:22 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டது.  
 
மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை அளித்துள்ள தகவலின்படி, நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் 378 பேர் வேட்பு மனு தாக்கலை அளித்துள்ளனர். முதல் இரண்டு நாள்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,840 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,091 பேரும் வேட்புமனு அளித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்