அவர்களிடமிடம் இருந்து ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பிடிப்பட்டபோது அவர்களிடம் எந்த பொருட்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் பத்து, பத்து பேராக பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என அங்கு உள்ள காவல் நிலையங்களில் ஆந்திர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.