பேய் ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்!

திங்கள், 21 ஜூன் 2021 (08:58 IST)
திருவண்ணாமலை அருகே பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் கருதினர். இதனை அடுத்து சிறுவனின் உடலில் இருந்த பேயை விரட்டுவதாக கூறி மூன்று பெண்கள் அந்த சிறுவனை மாறி மாறி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுத போதும் மூன்று பெண்கள் தொடர்ச்சியாக அடித்ததன் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இந்த நிலையில் சிறுவனை அடித்து கொலை செய்த கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி திலகவதி கவிதா ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தனர் என 3 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்