தலை தூக்கும் கள்ளச்சாராயம்? 3 பேர் பலி! – விழுப்புரத்தில் அதிர்ச்சி!

ஞாயிறு, 14 மே 2023 (10:03 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை அடுத்த எக்கியார் குப்பம் என்ற கிராமப்பகுதியில் ரகசியமாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்துள்ளது. அங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 7 பேர் வீட்டிற்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 7 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதில் சுரேஷ், தரணிதரன் மற்றும் சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் அப்பகுதி கிராமங்களில் விசாரணை நடத்தியதில் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தமாக 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கள்ளச்சாராயம் விற்ற அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்