விஜய்க்கு கூடும் கூட்டம் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தை போல் உள்ளதா என்ற கேள்விக்கு அவர், "எம்.ஜி.ஆர். நேரடியாக கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு போகவில்லை. அவர் 20 ஆண்டுகள் திமுகவில் உழைத்த பின்னரே கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் பாட்டு பாடியவுடன் வந்து முதலமைச்சர் ஆகவில்லை," என்று பதிலளித்தார்.
விஜய் இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அரசியல் என்பது சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது அல்ல. அது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்," என்று எஸ்.வி. சேகர் அழுத்தமாகக் கூறினார்.