எனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கின்றது! ஆட்சி அமைப்பேன்: தினகரன் அதிரடி

புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:22 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைய டிடிவி தினகரன் 60 நாட்கள் கெடு விதித்தார். அந்த கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஆனால் இரு அணிகளும் இணைய எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை



 
 
இந்த நிலையில் இன்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன், 'தனக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதனால் தன்னால் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் தன்னை தடுக்க எவராலும் முடியாது என்றும் அவர் சூளுரைத்தார்.
 
மேலும் சசிகலா மீது தேவையில்லாமல் கலங்கம் ஏற்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா மீது நிச்சயம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்த தினகரன், நடிகா் கமல்ஹாசன் போதிய ஆதாரத்துடன் புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்