காஞ்சிபுரம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

புதன், 24 மார்ச் 2021 (16:28 IST)
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவ மாணவர்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் அதே மருத்துவக் கல்லூரியில் மேலும் 40 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல்கள் வெளி வந்தாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விடுதியில் தங்கி இருந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்