10 தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த சிங்களப்படை: அதிர்ச்சி தகவல்!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:50 IST)
நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை சிங்கள படை கைது செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவ்வப்போது சிங்களப்படை சிறைபிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது
 
கடந்த 10ஆம் தேதி 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து நிலையில் தற்போது மீண்டும் பத்து பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
 
கோடியக்கரைக்கு தென்கிழக்கே முல்லைத் தீவு அருகே நடுக்கடலில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுபோன்ற சம்பவங்கள் தொடரா வண்ணம் நிம்மதியாக கடலுக்குள் சென்று மீன் பிடித்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்