திமுக மீது வழக்கு தொடருவேன் - மு.க.அழகிரி

செவ்வாய், 25 மார்ச் 2014 (19:08 IST)
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக அழகிரி கூறியுள்ளார்.
FILE

தன்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், இது குறித்து விளக்கம் கேட்டு கட்சியில் இருந்து நோட்டீஸ் எதுவும் அனுப்பப் படவில்லை என்றும் இதனால், கட்சியின் பொதுச் செயலர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

தற்காலிகமாக நீக்கப்பட்ட பின்னர் என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. எனது குற்றச்சாட்டுகளுக்கு திமுக எனக்கு விளக்கமளிக்கவில்லை. நானும், எனது ஆதரவாளர்களும் திமுக தான். நான் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் கட்சியிலிருந்து வெளியேறுவோம் என்பதில்லை. என்னை சந்தித்த மாற்றுக்கட்சிகாரர்களிடம் அவர்களை ஆதரிப்பதாக கூறவில்லை என அழகிரி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்