சென்னையில் ஆந்திர வர்த்தக அமைப்பினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டடு திரும்பிய சிறிலங்கத் துணைத் தூதர் அம்சாவின் காரை மறித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன முழக்கம் எழுப்பியுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து தனது காருக்கு அம்சா திரும்பியபோது அவருடைய காரின் முன் நின்று பெ.தி.க.வினர் முழக்கம் எழுப்பியதாகவும், 20 நிமிட நேரம் தொடர்ந்த அந்த எதிர்ப்பின்போது அம்சாவின் கார் சற்று சேதமடைந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
எதிர்ப்பாளர்கள் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று அம்சா கேட்டுக் கொண்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.