சென்னை மாநகரப் காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் உள்பட 9 காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் விஜயகுமாரி சென்னை விஷேச பிரிவு சட்டம்-ஒழுங்கு உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது)
சென்னை உளவுப்பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பகலவன் பதவி உயர்வு பெற்று, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் சென்னை இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக உள்ள துரைகுமார் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை இரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மனோகரன் வடசென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஜோஷி நிர்மல் குமார் தமிழ்நாடு கமாண்டோ படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடசென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக இருக்கும் பாஸ்கரன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.