எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெளியீடு
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2012 (09:00 IST)
எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் பெயிலாகி சிறப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.
மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ள தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற அரசு தேர்வுகள் இயக்குனரக இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழை 29, 30 தேதிகளில் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர், அக்டோபர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை அரசு தேர்வுகள் இயக்குனரகத்தை அணுகவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.