மஹிஷாசுரனை வதம் செய்த சண்டிகா தேவியை தேவர்களும், முனிவர்களும் தோத்திரம் செய்ய பராசக்தி லட்சுமி துர்கையாக சிம்மாசனத்தில் அமர்ந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். உலகைக் காக்கும் அன்னையை சண்டிகா தேவி என்று குறிப்பிட்டு, தேவர்கள் அவளின் சௌந்தர்யத்தை தியானித்து இந்த உலகத்தைக் காக்க வேண்டுகின்றனர்.
webdunia photo
WD
பூரண சந்திரன் போல் முகம் கொண்ட சண்டிகா தேவியின் அழகையும், வீரத்தையும் வியந்து விண்ணிலும், மண்ணிலும் தென்படும் அழகுகளெல்லாம் அன்னையின் அணிகலன்களே என்றும் கூறி வேண்டுகின்றனர். இப்படியாக தேவர்களும், முனிவர்களும் போற்றித் துதி பாடுவதை சண்டிகா தேவியாகிய மகாலட்சுமி ஒரு மந்தகாசப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்கும் நாள் இன்று.
அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும்.
webdunia photo
WD
மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஐந்து முக விளக்கேற்றி பூஜை செய்வது சிறந்தது.