வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

வியாழன், 30 ஜூன் 2022 (18:08 IST)
வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இருதயத்தை பலமாக்குகிறது. இதனால் இருதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்க உதவுகின்றது.


வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பயன்படுகிறது.

வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின்

வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளை சதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலும் குறைகிறது. இதனால் ஹாட் அட்டாக், ஸ்ட்ரோக், பிடிப்புகள் மற்றும் வாயு பிரச்சணைகள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.

காலை வேளையில் வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்ட வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்கின்றது. உணவை செரிமானம் செய்வதுடன் வயிற்றை நன்கு சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலும் நீக்குகின்றது. இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் தருகின்றது.

சிறுநீரகத்தில் கற்கள் மற்றும் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் வெந்தயத்தை முதல் நாள் இரவு வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.

வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை தீரும். தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிச்சி அளிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்