உடல் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றும் தேங்காய் பால் !!

புதன், 1 ஜூன் 2022 (09:29 IST)
தேங்காயில் உயர் ரகப் புரதம், அமினோ அமிலங்கள், அதிக அளவில் பொட்டாசியம், சோடியம், மெக்னிசியம்,  பாஸ்பரஸ், கந்தகம், அயம், சுதையம் முதலியவை உள்ளன. உயிர்ச் சத்து B அதிக அளவிலும் A சிறிதும் இருக்கிறது.


தேங்காய்ப்பாலை முகத்தில் உள்ள மாசுக்கள் குறிப்பாக அம்மை வடுக்கள் அகற்றத் தடவி வரலாம். தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

தேங்காய் பால் குளிர்ச்சி ஊட்டல், ஊட்டம் தருதல், மலமிளகுதல், நீர் பிரிதல், போன்ற நலன்களை உண்டாக்கியது.

தேங்காய்ப்பால் சத்துக் குறைவினால் வரும் குழந்தைகள் உடலைச் சரிசெய்து ஊட்டம் அளித்து வளர்ச்சியைத் தருகிறது. தேங்காயைத் துருவிப் போட்டு அரைத்து போட்டும் சமையலில் பயன்படுத்துவார்கள். உலர்த்தப்பட்ட தேங்காய்யும் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எலுபுறுக்கி நோயினால் பலவீனம் உள்ளவர்கள், நாள்தோறும் நான்கு முதல் 8 அவுன்ஸ் தேங்காய் பால் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிட்டும். தேங்காய் பால் காய்ச்சல் தணிக்கவும், தாகத்தைப் போக்கவும் பயன்படுகிறது.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்