இந்த நிலையில், திடீரென இந்நிறுவனம் "எட்டர்னல்" என்று பெயர் மாற்றுவதாக அறிவித்து, புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் நடைபெற்றது. மேலும், இந்த பெயர் மாற்றத்திற்கு பின்னர் பங்குதாரர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் நிறுவன தலைவர் பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பெயர் மாற்றம் மட்டுமின்றி மேலும் சில புதிய அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும், தனது சேவைகளிலும் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் எட்டர்னல் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.