பாலியல் தொழிலில் தாய்-சகோதரி: சுட்டுக் கொன்ற வாலிபர்

புதன், 28 செப்டம்பர் 2016 (13:26 IST)
அரியானா மாநிலம் குர்கானில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட தாய் மற்றும் சகோதரியை, வாலிபர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


 
அரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சுமித்குமார். இவருடைய 36 வயது தாய் மற்றும் 16 வயது சகோதரி, பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
 
சுமித்குமார், தனது தாய் மற்றும் சகோதரி பாலியல் தொழிலில் ஈடுப்படுவது பிடிக்காமல் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
 
இதில் ஆத்திரமடைந்த சுமித்குமார் தாய் மற்றும் சகோதரியை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக அவரது நணபர்கள் மூலம் நாட்டு தூப்பாக்கி வாங்கி அதன் மூலம் இருவரையும் சுட்டுக் கொலை செய்தார்.
 
இதுகுறித்து காவல்துறையினர் சுமித்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்