பாகிஸ்தான் காதலியை மணக்க சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரிய வாலிபர்

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (19:14 IST)
ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாகிஸ்தானின் இருக்கும் தனது காதலியை மணக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கேட்டுள்ளார்.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த நரேஷ் தவானி என்பவருக்கும் பாகிஸ்தான் நாட்ட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த பிரியா பச்சானிக்கும் இந்த மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
 
அண்மையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இரு நாடுகளிடையே போர் ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் உள்ள இந்திய தூதரகத்தில் மணமகள் வீட்டாருக்கு இந்தியா வர விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
 
இந்நிலையில் நரேஷ் தவானி, பிரியா பச்சானியை திருமணம் செய்ய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டுள்ளார்.
 
சுஷ்மா சுவராஜ் பதிலுக்கு டுவிட்டரில் பக்கத்தில் உதவி செய்வதாக டுவிட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்