7 மாசமா சம்பளம் தராத முதலாளி: பழிதீர்க்க 7 தொழிலாளர்கள் செய்த வேலை... கிடுகிடுத்துப்போன காவல்துறை

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:50 IST)
பெங்களூருவில் 7 மாதமாக சம்பளம் தராத முதலாளியை தொழிலாளர்கள் கடத்தி கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பலர் வேலை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தொழில் நஷ்டமடைந்ததால், அந்த நிறுவனத்தின் முதலாளியால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. இந்த மாசம் சம்பளம் கொடுத்துடுறேன்ன்னு சொல்லி சொல்லியே 7 மாதங்கள் கழிந்தோடின.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தொழிலாளர்கள், 7 பேர் தங்களது முதலாளியை கடத்தி வந்து டார்ச்சர் செய்தனர். சம்பளம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என கொலை மிரட்டலும் விட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அந்த நபரை மீட்டனர். அந்த 7 தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்