ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் எவ்வளவு? வெளியான தகவல்

புதன், 27 ஜூலை 2022 (21:37 IST)
நாட்டில் உள்ள தலையாய வங்கி ரிசர்வ் வங்கி. இதன் கவர்னராக பதவி வகிக்கும் சக்தி காந்த தாஸுன் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகிறது.

நாட்டில் உயர்ந்த பதவிகளில் ஒன்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி ஆகும். ரிசர்வ் வங்கி கவர்னர் மத்திய அமைச்சகத்தின் கீழ் பணியாற்றுவார்.  இவர்  நாட்டின் நிதிக்க்கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்தல், அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றில் பங்க்காற்றி வருகிறார்.

இந்த நிலையில்,ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியம் பெறுகிறார்.  இவர் பதவியேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சம்பளம் உயர்த்தப்படவில்லை. மேலும், 4 துணை கவர்னர்களுக்கு மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் பெறுகின்றனர் எனத் தகவல் வெளியாகிறது.

மேலும்,  நாட்டிலுள்ள பொத்துறை வங்கிகளில் பணியாற்றும் சி.இ.ஓக்களின் சம்பளம் பற்றிய சம்பள விவரம் வெளியாகிறது.

அதன்படி, எஸ்பிஐ வங்கி சி.இ.ஓ மாதம் ரூ.3.19 லட்சமும், மற்ற வங்கிகளின் பஞ்சாப் நேசனல் வங்கியை தவிர... இதர சி.இ.ஓக்கள் ரூ.3.5 லட்சமும், பெறுகின்றனர்.இதில், தனியார் வங்கிகளின் சி.இ.ஓக்களில் ஹெச்.டி.எப்.சி வங்கி  சி.இ.ஓ அதிகம் சம்பளம் பெறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்