தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? -ஆர்.எஸ்.பாரதி

Sinoj

புதன், 10 ஏப்ரல் 2024 (23:06 IST)
வரும் பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னை மீஞ்சூரில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது;
 
தமிழ் நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், ஆளுநர் மாளிகையில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் வழியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினால் என்னென்ன சொல்லியிருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்