மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்து ஆபாசபமெடுத்த மாணவன்....

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (19:56 IST)
டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் பிலஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்தது தற்போது சர்சையாகியுள்ளது. 
 
குறிப்பிட்ட மாணவன் மற்றும் மாணவி அடிக்கடி தனியாக சந்தித்து கொண்டனர். அப்போது பலமுறை அந்த மாணவியை மாணவன் கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றாக இருக்கும் போது போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளனர்.  
 
இதுகுறித்து அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனக்கு மயக்க மருந்து கொடுத்து மாணவன் கற்பழித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், மாணவனின் தரப்போ மாணவியுடைய சம்மதத்தின் பேரில்தான் உறவு கொண்டுள்ளளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்த வழக்கு நீதிபதியின் முன்னிலையில் வந்த போது அந்த மாணவனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மாணவியும், மாணவனும் ஒன்றாக இருக்கும் 4 ஆபாச படங்களும் மாணவனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்டு ஆதாரமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்