வாஜ்பாய்க்கான இந்த பாரத ரத்னா விருது, நாளை வழங்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று வழங்குகிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.