இந்த சட்டத்தை சாவர்க்கரே ஏற்றுக்கொள்ள மாட்டார்! – உத்தவ் தாக்கரே கருத்து

திங்கள், 16 டிசம்பர் 2019 (13:07 IST)
மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை சட்ட மசோதா குறித்து பேசிய மகாராஷ்டிரா முதல்வர் அது சாவர்க்கரின் கொள்கைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தால் நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ”நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றை திசை திருப்பவே மத்திய அரசு குடியுரிமை சட்டம் போன்ற விவகாரங்களை உயர்த்தி பிடிக்கிறது.

சாவர்க்கரின் கருத்து முற்றிலும் எதிரானதாக இந்த குடியுரிமை சட்டம் உள்ளது. எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்