லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின்பாஸ்குசான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் முற்றுகை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படைகள் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையை, இந்திய இராணுவத்தின் 44வது தேசிய ரைபில்கள், ஜம்மு & காஷ்மீர் காவல்துறை மற்றும் CRPF-யின் 178வது படை இணைந்து ஷோப்பியான் மாவட்டத்தின் இமாம் சாஹிப் பகுதியிலுள்ள பாஸ்குசானில் நடத்தின. அந்த பகுதியில் முற்றுகை வைக்கப்பட்டபோது, அருகிலுள்ள ஓர் மாமர தோட்டத்தில் தீவிரவாதிகள் சலசலப்பு காணப்பட்டது.
இதையடுத்து தீவிரவாதிகளின் இயக்கம் அருகிலுள்ள தோட்டத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது. படைகளின் விரைவான மற்றும் சிறப்பான செயற்பாடுகளின் மூலம், தீவிரவாதிகள் இருவர் கைதானார்கள். அவர்களது பெயர் இர்ஃபான் பஷீர் மற்றும் உசைர் சலாம் என தெரிய வந்துள்ளது.