உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

Siva

வியாழன், 29 மே 2025 (18:07 IST)
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஏப்ரல் 2025க்கு உரிய தொலைத்தொடர்பு சந்தாதாரர் தரவுகளுக்கான சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், ஏப்ரல் 30 தேதியிலான நிலவரப்படி இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே மாதத்தில் 19,45,211 புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டின் மொத்த மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 115,89,31,292 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய சந்தாதாரர்களை சேர்த்த நிறுவனம் ஜியோ ஆகும். 26,44,838 புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ள ஜியோ, தற்போது மொத்தமாக 47,24,08,690 சந்தாதாரர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாகத் திகழ்கிறது.
 
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஏர்டெல் உள்ளது. 1,70,658 புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ள ஏர்டெல், தற்போது மொத்தமாக 38,99,74,695 சந்தாதாரர்களை கொண்டுள்ளது.
 
முன்னணி நான்கு நிறுவனங்களில், Vi மற்றும் BSNL சந்தாதாரர்கள் குறைவடைந்த நிலையில் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் BSNL புதிய சந்தாதாரர்களை ஈர்த்திருந்தாலும், அந்த தொடர்ச்சி ஏப்ரல் மாதத்தில் முறிந்தது. ஏப்ரலில் BSNL 1,55,000 சந்தாதாரர்களை இழந்தது, இதன் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்போது 90,90,5,664 ஆக உள்ளது.
 
Vi நிறுவனமும் தொடர்ந்து சந்தாதாரர்களை இழக்கின்ற நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 6,47,620 சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதனால் அதன் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 20,47,11,113 ஆக குறைந்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்