16 நிமிடத்தில் முடிந்த இலவச டிக்கெட் முன்பதிவு! – திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

திங்கள், 29 நவம்பர் 2021 (08:22 IST)
திருப்பத்தியில் டிசம்பர் மாத இலவச தரிசனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டு 16 நிமிடங்களில் முடிந்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்திற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கொரோனா காரணமாக பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க நேரில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு தற்போது ஆன்லைன் மூலமாக மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த டிசம்பர் மாதத்தில் ஏழுமலையான தரிசிக்க இலவச டிக்கெட்டுகள் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே வேகவேகமாக புக்கிங் நடந்த நிலையில் 16 நிமிடங்களுக்குள்ளாக அடுத்த மாதத்திற்கான 3.10 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்