பணத்திற்காக தந்தையைக் கொலை செய்த மகன்

புதன், 29 டிசம்பர் 2021 (20:09 IST)
ராஜஸ்தான்  மாநிலத்தில் பணத்திற்காக தந்தையை கொலை செய்துள்ளார் மகன். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மா நிலம் பாரத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மோகாம் சிங். இவர் 4 காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். இ ந் நிலையில் கோசியா பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து அவர் மகன் தனது தந்தையை யாரோ கொன்றதாக் கூறினார். ஆனால்,. 4 லட்சம் காப்பீடு பணத்திற்காக அவரே தந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு பணத்திற்காக தந்தையைக் கொலை செய்து  நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்