கடந்த 29.10.14 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கான பாதுகப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி 13.7.16 அன்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லலாம். அவர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்காமல் முகவரியை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்கவேண்டும்.