ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி கைது !

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:03 IST)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவனை  போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் ஹந்தராவில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றுகொண்டிருக்கும்போது, ராஜ்வார் என்ற பகுதியில் ஒரு பயங்கரவாதி தப்பியோட முயன்றான். அப்போது அவனை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

அவனிடம் போலீஸார் விசாரித்தனர். அதில், அவன் குவாரா மாவட்டத்தைச் சேர்ந்த        உபைத் பஷூர் வானி;  ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தில் உள்ளதாகவும் கூறினான். தற்போது அவனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்