முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

திங்கள், 21 பிப்ரவரி 2022 (21:21 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறு தேர்தல் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது  திமுக தொண்டரை அரை நிர்வாணப்படித்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனால் திமுக தொண்டரை தாக்கிய ஜெயக்குமார் அவரை சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக இழுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இ ந் நிலையில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படித்திய வழக்கில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்