அண்டை மாநில முதல்வர் மருத்துவமனையில் அனுமதி: நுரையீரல் பாதிப்பு என தகவல்!

வியாழன், 7 ஜனவரி 2021 (17:26 IST)
தமிழகத்தின் அண்டை மாநில முதல்வர் ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அண்டை மாநில முதல்வர் மருத்துவமனையில் அனுமதி:
இருப்பினும் அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறை மற்றும் அவரது தற்போதைய உடல்நிலை குறித்த தகவல் எதுவும் மருத்துவமனை வெளியிடவில்லை. இன்னும் ஒரு சில நிமிடங்களில் தெலங்கானா முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முறைப்படி அறிக்கையாக வெளியிடும் என கூறப்படுகிறது
 
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்