சபரிமலை விவகாரம்; சீராய்வு மனுக்கள் விசாரணை இல்லை; உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath

திங்கள், 13 ஜனவரி 2020 (12:10 IST)
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணை செய்யப்போவது இல்லை என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்திய தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்படும் எனவும், பெண்கள் மசூதி, கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா? என விசாரிக்கப்படும் எனவும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சபரிமலை வழக்கு குறித்தான சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை எனவும், மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா என்பது குறித்து நுணுக்கமாக விசாரிக்கவுள்ளதாகவும் ய்ச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்