சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து.. அதானிக்கு சென்றது ஒப்பந்தம்.. இலங்கை அரசு அதிரடி..!

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:34 IST)
சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்ற பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் காற்றாலை மின் உற்பத்தி ஆலை அமைக்க சீன நிறுவனத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
 
ஆனால் இந்த ஒப்பந்தத்தை அதிரடியாக இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே இந்தியா வந்து மீண்டும் இலங்கை சென்ற பின்னர் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அதானி நிறுவனத்திற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் அளித்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்