ராகுல் காந்தி நடைப்பயணத்தில் சோனியா, பிரியங்கா கலந்து கொள்கிறார்களா?

திங்கள், 3 அக்டோபர் 2022 (13:49 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக இந்திய ஒற்றுமை நடை பயணம் செய்து வருகிறார் என்பதும் இந்த பயணத்திற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
கன்னியாகுமரியின் தொடங்கிய இந்த பயணம் தற்போது கேரளாவில் முடிவடைந்து கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் மட்டும் 21 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது 
 
 இந்த நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி இந்த நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளதாகவும் அவருடன் பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டு முதல் மீண்டும் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்