அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் வாங்கினால் 0.75 சதவீதமும், புறநகர் ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கினால் 0.5 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி இன்று அறிவித்துள்ளார்.
மேலும், மின்னனு முறையில் (ஆன்லைன்) ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் எனவும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கார்டு மூலம் கட்டணம் செலுத்தினால் 10 சதவீதமும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மின்னனு முறையில் பணம் செலுத்தினால் சேவை கட்டனம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.