இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி வார்டுகளா? ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மருத்துவர்!

வியாழன், 16 ஏப்ரல் 2020 (08:19 IST)
corona wards
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இந்து-முஸ்லீம் நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகள் அமைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் தவறான செய்திகளை வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கு அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அரசு மருத்துவமனையில் இந்து முஸ்லிம் ஆகிய கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தனித் தனி வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் அடிப்படையில் பல ஊடகங்களில் இந்த செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் ஒரு குறிப்பிட்ட மருத்துவரை குறிப்பிட்டு அவர் தான் இந்த ஏற்பாடுகள் செய்ததாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இந்து முஸ்லிம் என தனித்தனியான வார்டுகள் அமைத்திருப்பதாக அமைத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்து இருக்கும் செய்தி முற்றிலும் தவறானது பொய்யானது என்றும் ஊடகங்கள் இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அகமதாபாத் மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த செய்தி தவறான செய்திக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் இதுபோன்ற செய்திகளை உறுதி செய்துகொண்டு அதன்பின் வெளியிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்