தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் என்பவர் தனது வீட்டிற்கு கிரகப்பிரவேச விழா நடத்தினார். இந்த விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்ட நிலையில், அவருக்கு பாரதிதாசன் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றதாக புகைப்படம் வெளியானது.
தமிழக அரசையும், திமுகவையும் ஒரு பக்கம் மிக கடுமையாக தமிழக வெற்றிக்கழகம் தாக்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி திமுக அமைச்சருக்கு பண மாலை போட்டு வரவேற்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, விஜய்க்கு பாரதிதாசன் மன்னிப்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், "அமைச்சர் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்ததாகவும், அச்செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும்," கூறியுள்ளார். "இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது," என்றும் அந்த மன்னிப்பு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.