ராம்குமாரையும் சுவாதியையும் பற்றி கருத்து சொன்ன நடிகர்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (12:50 IST)
திருச்சியில் செய்தியாளர்களிடம் நடிகர் எஸ்.வி. சேகர். கூறியதாவது,


 
”ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது சிறைத்துறை கண்காணிப்பின் பலவீனத்தையே காட்டுகிறது. சுவாதி கொலையையும், ராம்குமார் தற்கொலையையும் ஜாதி ரீதியாக அணுகக் கூடாது.

காவிரிப் பிரச்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு செல்லக் கூடாது. காவிரிப் பிரச்னையை முதல்வர் ஜெயலலிதா சட்டப்படி அணுகியுள்ளார். அவருக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதற்காக மற்றவர்கள் பேச்சுவார்த்தைக்கு செல்ல வலியுறுத்துவதாக நினைக்கிறேன்.

ஊழல் புகாரினால்தான் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் இடைநீக்கமே செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டடம் கட்டப்படும்.” என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்