இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

Siva

திங்கள், 5 மே 2025 (18:57 IST)
பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபருடன் பேசினார். இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து, புடின் இந்தியாவுக்கு முழு ஆதரவை தெரிவித்தார்.
 
இந்த தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சாளரான ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
 
புடின், காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆழ்ந்த கவலையுடன் இரங்கல் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முழு ஆதரவை பெறுவதாகவும் கூறினார்.
 
புடின், பயங்கரவாதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு நாடுகளின் தலைவர்களும் தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக உறுதி தெரிவித்தனர்.
 
இவ்வாறு உரையாடலின் முடிவில், பிரதமர் மோடி புடினுக்கு வெற்றி தினத்தின் 80வது ஆண்டு விழாவுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு புதினை பிரதமர் மோடி அழைத்த நிலையில் டெல்லி வர புதினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்