உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

திங்கள், 4 அக்டோபர் 2021 (16:48 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூரில் காவல்த்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.45 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதாகவும், இதில் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது.

உ.பில் 8 விவசாயிகள் உயிரிழப்பு குறித்து  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது:  உ.பி., விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்