ஏடிஎம்-ல் 4,500 ரூபாய்: மக்கள் மகிழ்ச்சி!!

சனி, 31 டிசம்பர் 2016 (11:16 IST)
நாளை முதல் ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


 
 
ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். 
 
மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்தார். மோடி கூறியபடி, அரசு வழங்கிய 50 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
 
இந்நிலையில் நாளை முதல் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்