சட்டவிரோதமாக ரூ.19,000 கோடி கருப்பு பணம் பதுக்கல்: அருண் ஜெட்லி தகவல்!!

சனி, 22 ஜூலை 2017 (14:53 IST)
இந்தியர்கள் சட்டவிரோதமாக 19,000 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


 
 
700 இந்தியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து அதற்கு முறையாக வரி செலுத்தாமல் இருக்கின்றனர். இதன்மூலம் 11,0010 கோடி ரூபாயை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக 72 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் சட்டவிரோதமாக 8,437 கோடி ரூபாய் பதுக்கி உள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. 
 
இதற்கு கூடிய விரைவில் நடவடிக்கைகள் எடுக்க்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்