இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பின் மூலம், நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் பெற அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, இந்த வரம்பு 75 சதவீதமாக இருந்தது.
முந்தைய மாதங்களில், நகைக் கடன்கள் தொடர்பான பல கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்தது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்வினை உருவானதால், மத்திய அரசு அந்த விதிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதிய அறிவிப்பு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக இருப்பதுடன், அவசர நிதி தேவைகளை சந்திக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, பொது வங்கிகள் 75% வரம்பை கடைப்பிடித்து வந்த நிலையில், சில தனியார் மற்றும் நிதி நிறுவனங்கள் 88% வரை கடன் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.